சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நான்கரை கிலோ ஹெராயின் போதைப்
பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக 2 பேரை மத்திய
வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். மும்பையில் இருந்து சென்னைக்கு
வந்த ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் சேக் பாகிம் என்பவர் வைத்திருந்த
பையில் 4 அரை கிலோ போதை பொருள் சிக்கியது. இதையடுத்து மும்பையைச் சேர்ந்த
அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், போதைப் பொருளை
வாங்குவதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த சிவநேசன் என்பவரையும்
அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து சிவநேசன் தெரிவித்த தகவலின் பேரில்
வேளாங்கண்ணியில் உள்ள அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கிலோ
ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்
கைப்பற்றிய 6.5 கிலோ எடையுள்ள போதை பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 9 கோடி
ரூபாய் என கூறப்படுகிறது.