கருணாநிதிக்கு எதிரான அவதூறு வழக்கு: உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

       திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள 2 அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
முரசொலி நாளிதழில் வெளியான செய்தி தமிழக அரசுக்கு அவதூறு விளைவிப்பதாக கூறி திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முரசொலி ஆசிரியர் செல்வம் மீது இரண்டு அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கு தொடர வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரியும் முரசொலி ஆசிரியர் செல்வம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி பால்.வசந்தகுமார் இந்த இரு வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.                         

                                                             -சத்திஷ் K.K.K.nagar