புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதித்துள்ள சென்னை காவல்துறை

         புத்தாண்டுக் கொண்டாட்டங்களை ஒட்டி, உணவு மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 31 ம் தேதி இரவு, கேளிக்கை விடுதிகளின் அனைத்து நுழைவு வாயில்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக அமைக்கப்படும் மேடைகள் உறுதித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும்.
நீச்சல்குளத்தின் மீதோ, அதன் அருகிலோ மேடை அமைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிபோதையில் இருப்பவர்கள் வாகனங்களை ஓட்டிச் செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும், விடுதிகளுக்குள் பட்டாசு வெடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொண்டாட்ட நிகழ்ச்சிகளை அதிகாலை 2 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளரின் செய்திக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
-ஹாட் ஸ்பாட் நரேஷ்