ஐ.நா., தகவல்கள்:
- மனித உரிமைகள் மீறல் குறித்து இலங்கை அரசு முழுமையான விசாரணை நடத்தவில்லை.
- புலம் பெயர்ந்தவர்களை குடியமர்த்தும் பணி இலங்கையில் முழுமையாக நடைபெறவில்லை.
- எல்எல்ஆர்சி.,யின் ஒரு சில பரிந்துரைகளை மட்டுமே இலங்கை நிறைவேற்றியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐ.நா பரிந்துரைகள்:
- போருக்கு பின்னால் காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச விசாரணை தேவை.
- கைதான விடுதலைப் புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
- சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்.
- நேர்மையான நடவடிக்கைகளால் மட்டுமே உரிய நிவாரணம் கிடைக்கும்.
- சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.