சென்னையில் சிலிண்டர் விபத்து: 3பேர் பலி

       சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் இன்று காலையில் ஒரு வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தந்தை மகன் உள்பட 3 பேர் பலியாகினர். 8 பேர் தீக்காயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போஜராஜன் நகரைச் சேர்ந்தவர் பஷீர் உஷாத், இவர் இன்று காலையில் வீட்டில் தேனீர் போடுவதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்த போது சிலிண்டர் வெடித்தது. இதில் பஷீர் உஷாத் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும் அவரது வீட்டின் சமையலறை சேதமடைந்தது, சமையலறை சுவர் இடிந்து பக்கத்து வீட்டில் விழுந்தது. இதில் அந்த வீட்டில் வசிக்கும் தேன்மொழி மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோரும் பலியாகினர். 2 குழந்தைகள் உள்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-ஹாட் ஸ்பாட் நரேஷ்