தி.நகரில் ஆம்பூலன்ஸ் செல்ல வழியில்லை குடியுருப்பு வாசிகள் கோரிக்கை


      சென்னை தி நகர் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி நகர் குடியுருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை தி நகருக்கு வருபவர்களுக்கு போதுமான அளவிற்கு வாகனங்களை நிறுத்தும் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள துக்காராம் தெரு, தனலட்சுமித்தெரு, மேட்லி சாலை உட்பட 20 மேற்பட்ட தெருக்களில், தி. நகருக்கு வருவோர், வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால் அவசரக்காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்றவைகள் கூட தங்கள் பகுதிக்கு வர முடியவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதிவாசிகள். பள்ளிகளுக்கு அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளாலும், இரவில் நடைபெறும் சட்டவிரோத செயல்களாலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
                                 -ஹாட் ஸ்பாட் நரேஷ்