மழையால் பாதிக்கப்பட்டுள்ள வடசென்னை பகுதிகளான வியாசர்பாடி,
திருவொற்றியூர், ஓட்டேரி ஆகிய இடங்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.
முனுசாமி, மேயர் சைதை துரைசாமி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர்
பார்வையிட்டனர்.
மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்
நிவாரணப் பணிகள் குறித்தும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்
ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் மழை தொடர்பான பாதுகாப்பு மற்றும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா
தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்த இந்த ஆய்வு இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-பசுமை நாயகன்.
-பசுமை நாயகன்.