அவதூறு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி நேரில் ஆஜராக உத்தரவு

     மிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக திமுக தலைவர் கருணாநிதிக்கு நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் என்.ஆர். சிவபதியும், பச்சைமாலும், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முரசொலி நாளிதழின் ஆசிரியர் செல்வம் மீது தனித்தனியே 2 அவதூறு வழக்குகளை தொடுத்திருந்தனர். இந்த வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி பொன்.கலையரசன், வரும் டிசம்பர் 18ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செல்வம் ஆகியோர் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இந்த இருவர் மீதும் ஏற்கனவே தொடரப்பட்ட 2 அவதூறு வழக்குகளில் சம்மன் அனுப்பபட்டு உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது.                                                            
                                                                           -இணைய செய்தியாளர் - s.குருஜி