டிஜிபி பதவி நீட்டிப்பை எதிர்த்து வழக்கு

        தமிழக காவல்துறை தலைவர் ராமானுஜத்துக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துள்ளனர்.
டி.ஜி.பி ராமானுஜத்தின் பதவி உயர்வை எதிர்த்து, வழக்கறிஞர் சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பை கவனித்து வந்த, ராமானுஜம், கடந்த 5ஆம் தேதி அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும், அவரது பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து உத்தரவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கூடுதல் டிஜிபிக்கள் 6 பேரின் பதவி உயர்வு தடைபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் விதிகளின்படி, டிஜிபிக்கு பதவி நீட்டிப்பு செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது, இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தர்மராவ், ராஜேஸ்வரன் ஆகியோர், இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க விரும்பவில்லை என கூறினர்.
இதனால், இந்த மனுவை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
-பூமித்ரா சுரேஷ்